Saturday, July 7, 2012

பணம்


அவன் என்னிடத்தில் இருந்த போது
நான் மனிதனாகவில்லை
அவன் என்னை விட்டு போனபோது
நான் மனிதனாக இருந்தேன் ......
                                       தீட்டுபுவன்
                                            T. நேசன்

காதல்


உன் மீது நான் கொண்டகாதல்
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட
புதையலாக இருந்திட்டு
போகட்டும் என்னுள்ளே ....
                                                         தீட்டுபுவன்
                                                                   T.நேசன்

அரசாங்கத்தை மிரட்டும் முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துவரும் அதேவேளை, இந்த ஒப்பந்தத்தை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Friday, July 6, 2012

போரில் உதிர்ந்த மலர்கள்


கிரிஷாசன்
23, June 2012
Views 155
நீர்த்திரை பாய்ந்து விழிவழிய சிறு
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீற அமைதியுடன் அங்கே
வார்த்தை கனல்கொள்ள வாயுரைத்தாள்
பார்த்தவர் போற்றும்நல் வாழ்வுதனும் ஒரு
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த எங்கள்
கோபுர வாழ்வு குலைந்த தய்யோ